கள்ளக்குறிச்சி ஜூலை 14- கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை அமைச்சர் வருவதை முன்னிட்டு நிகழ்ச்சியின் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார். முன்னாள் முதல மைச்சர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு உலகங்காத்தான் கிராமத் தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நலத் திட்ட உதவிகளை பயனாளி களுக்கு வழங்க வருகை தருவதையொட்டி இந்நிகழ்ச்சியின் முன்னேற் பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஷ்ரவன்குமார். சட்டமன்ற உறுப்பினர் வசந்த் கார்த்தி கேயன். மாவட்ட காவல் கண் காணிப்பாளர் மோகன்ராஜ் ஆகியோர் வெள்ளியன்று ஆய்வு செய்தனர். தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில்.விளிம்பு நிலை மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப் பட்டு வருகிறது. அதனடிப் படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 19ஆம் தேதி உதய நிதி ஸ்டாலின் முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்திடவும் புதிய பணி களுக்கு அடிக்கல் நாட்ட வும் உள்ளார். இந்நிகழ்வில் கள்ளக் குறிச்சி வருவாய் கோட்டாட் சியர் பவித்ரா.கள்ளக் குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்ய மூர்த்தி,பொதுப் பணித்துறை செயற்பொறி யாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) மணிவண்ணன், செயற் பொறியாளர் பொதுப் பணித்துறை (கட்டிடம் மற்றும் கட்டுமான பணி கள்)மாலா, கள்ளக்குறிச்சி வட்டாட்சிய சத்திய நாரா யணன். அரசு அலுவலர்கள். காவல்துறையினர் கலந்து கொண்டனர்.