districts

img

நெய்தல் புத்தகத் திருவிழா

கடலூர், செப்.29- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர்  மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் ‘நெய்தல் புத்தக திருவிழா’ 11 நாட்கள் நடை பெறுகிறது. இதன் தொடக்க விழா சனிக்கிழமை (செப்.29) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மை), எஸ்.எஸ். சிவசங்கர் (போக்கு வரத்து), சி.வெ.கணேசன்  (தொழிலாளர் நலன்) ஆகி யோர் புத்தக கண்காட்சியும், பல்துறை பணி விளக்க கண்காட்சியையும் துவக்கி வைத்தனர். புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்ட அரங்குகள்  அனைத்தையும் அமைச்சர் கள், சட்டமன்ற உறுப்பினர் கள், ஆட்சியர் பார்வையிட்ட னர். நெய்தல் புத்தக திரு விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட னர். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும்  வகையில் கருத்தரங்கம் நடந்தது. இதில் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. ஐயப்பன், சபா. ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா கிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் ஆட்சியர் மது பாலன், காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட பல் வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.