districts

img

சசிகாந்த் செந்திலை ஆதரித்து

திருவள்ளூர், மார்ச் 31- திருவள்ளூர்  மக்களவைத் தொகுதி  காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு  கை சின்னத்தில் வாக்குகளை சேகரிக்கும் வகையில் சனிக்கிழமையன்று (மார்ச் 30), கும்மிடிப்பூண்டி பஜாரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலா ளர்  டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ  தலைமை தாங்கினார். இதில்  பொன்னேரி எம்எல்ஏ  துரை.சந்திரசேகரன் உட்பட பலர்  பேசினர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில  தலைவர் செல்வ பெருந்தகை பேசுகையில், ‘காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை  குறைந்தது 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற வைக்கவேண்டும் ஏனென்றால், எதிரணியில்உள்ளவர்கள் தமிழ் நாட்டையும், தமிழக மக்களை யும் வஞ்ஜித்த  கட்சிகளாகும். எனவே தான் அதிமுக கூட்டணி வேட்பாளர்களையும், பாஜக கூட்டணி வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.  பொய்மூட்டை மோடி மோடி தமிழ் நாட்டிற்கு வந்து   பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.  கடந்த 10 ஆண்டுகால ஆட்சியிலே தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறாரா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்துக்களின் பிரதிநிதியா மோடி? இந்துத்துவா என்ற போர்வையை போர்த்திக்கொண்டு நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து கொண்டு வருகிறார்கள்.இராமேஷ்வரம் கோயிலை உலக தரம் வாய்ந்த கோயிலாக  மாற்றுவேன்  என்று மோடி வாக்குறுதியை கொடுத்தார். இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கேட்டால் இந்துக்களின் பிரதிநிதி கள் நாங்கள் தான் என்கிறார்கள். இந்துக் களின் பிரதிநிதி அல்ல இந்த நாட்டை பிளவு படுத்துகிற கட்சி. இந்த நாட்டு மக்களை அழித்து ஒழிக்கிற ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட கட்சி தான் பாஜக, அதன் பிதா மகன் தான் மோடி. இந்த கூட்டத்தை அடி  யோடு விரட்டியடிக்க வேண்டும் என்றார். சசிகாந்த் செந்தில்  அளித்த வாக்குறுதிகள் வேட்பாளர் சசிகாந்த் பேசுகையில் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் சென்னை -கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தை 4 வழிப் பாதையாக மாற்றவும், மெட்ரோ ரயிலை விம்கோ நகரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க்ப்படும் என்றார். கும்மிடிப் பூண்டி வழியாக சென்னைக்கு வந்து செல்லும் அனைத்து விரைவு, ரயில்களை கும்மிடிப்பூண்டியில் நிறுத்துவதற்கு ஏற்பாடு  செய்யப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.