districts

img

விலைவாசி உயர்வுக்கு காரணமான பாஜகவை தேர்தலில் வீழ்த்துவோம்

சென்னை, செப். 5-         விலைவாசி உயர்வுக்கு காரணமான பாஜகவை வீழ்த்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் அ.ராதிகா அறைகூவல் விடுத்தார். திருவொற்றியூரில் நடைபெற்ற கூட்டத்தில் விலைவாசி உயர்வு ,  வேலையின்மைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில்  வரும் 7ஆம் தேதி நாடு முழுவ தும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அதன் விளக்கக் கூட்டம் திரு வொற்றியூர் பகுதிக்குழு சார்பில் எர்ணாவூரில் பகுதிக்குழு உறுப்பினர் பி.அலமேலு தலைமையில் திங்களன்று (செப். 4) நடைபெற்றது. இதில் ராதிகா பேசுகை யில், பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின், இதுவரை அவர்கள் அளித்த எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சமையல் எரிவாயு சிலிண்ட ருக்கான மானியம் நேரடி யாக வங்கியில் செலுத்தப் படும் என்றார்கள். ஆனால் ரூ.6  முதல் ரூ.24 வரை மட்டுமே மானியம் வழங்கப் படுகிறது. அதுகூட சிலருக்கு கிடைப்பதில்லை. இதன் மூலம் மக்கள் பணத்தை பாஜக அரசு கொள்ளை அடித்து கார்ப்ரேட் நிறு வனங்களுக்கு வாரி வழங்கு கிறது என்று குற்றம் சாட்டினார்.

அத்தியாவசிய பொருட் களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதற்கு பெட்ரோல், டீசல் விலை  உயர்வும், சுங்கக் கட்ட ணமும்தான் காரணம். ஆனால் அதை குறைப் பதற்கான எந்த நடவடிக்கை யையும் ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ளவில்லை என்றார். கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியின் சாதனை என்னவென்றால் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி 9 மாநிலங்களில் ஆட்சி அமைத்தது தான் என்றும் சாடினார். பன்முகத்தை பாது காக்க, அரசியலமைப்பு சட்டத்தை, மதச்சார்பின் மையை, பெண்களை, மாநில உரிமையை பாது காக்க வேண்டும் என்றால் 7ஆம் தேதி நடைபெறும் மறியலில் அரசியல், மதம், சாதி, இனம் கடந்து அனைவரும் பங்கேற்க வேண்டும். அதேபோல் வரும் நாடாளுமன்றத் தேர் தலில் பாஜகவை வீழ்த்த வும் அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர் வேல் ஆகியோரும் பேசி னர். முன்னதாக கிளைச் ்செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். இதில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, மாவட்டக் குழு உறுப்பினர் செல்வ குமாரி, பகுதிக் குழு உறுப் பினர்கள் கருணாநிதி, அன்பு, புஷ்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.