districts

செங்கல்பட்டு நகரில் குடிநீர் தட்டுப்பாடு

செங்கல்பட்டு, ஜூலை21-

     செங்கல்பட்டு நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  

   பூமியில் புதைக்கப்பட்ட குழாய் உடைப்பே இதற்கு காரணம். இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் 2 அல்லது 3 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.  இதனால் குறித்த நேரத்தில் குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கைலாசநா தர் கோவில் தெரு, தூக்குமர  குட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரு குழாய்களில் எப்போதும் காலி குடங்களுடன் குடி  நீருக்காக காத்துக் கிடக் கின்றனர்.

     சில இடங்களில் குடி நீருடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. குழாய்களில் தண்ணீர் வரும்போது சிலர்  மோட்டார் மூலம் நீரை  உறிஞ்சி எடுத்து விடுகின்ற னர். இதனால் தெரு குழாய்களுக்கு வரவேண் டிய குடிநீர் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்து கிடக்கும் நிலை உள்ளது.