சென்னை, ஜூலை 11–
சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் சிமாட்ஸ் பொறியியல் கல்லூரியில் உயிர்-சுற்றுச் சூழல் அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்க ளுக்கு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி அவர்கள், நீரில் உள்ள வண்டல்களை சுத்திகரிப்பது தொடர்பான பயிற்சிக்காக இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தில் எக்ஸ்னோரா அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை நேரில் பார்த்து அறிந்துகொண்ட னர்.
இந்த தண்ணீர் சுத்தி கரிப்பு மையம் சென்னை, செங்குன்றம் பகுதியில் அமைந்துள்ளது. தண்ணீ ரில் உள்ள வண்டல்களை அகற்றுவது தொடர்பான செயல்முறை பற்றி மாணவர்கள் அறிந்து கொண்டனர். இக்கல்லூரி யின் வளர்ந்து வரும் இளம் விஞ்ஞானிகள் மற்றும் எக்ஸ்னோரா அமைப்பின் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.