districts

img

நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும்

வேலூர்,  மார்ச் 13 - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர் (சிஐடியு) சங்கத்தின் வேலூர் வடக்கு மண்டலம் சார்பில் குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலு வலகம் முன்பு மாநிலத் துணைத் தலை வர் கே.செல்வம் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் பி.பாலாஜி துணை செயலாளர் எம்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநில செயலாளர் சி.நாகராஜன், எஸ்.கோபால கண்ணன் (திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) இரா.பாரி (திருவண்ணாமலை), பி.சக்திவேல் (விழுப்புரம்), வி.இராமநாதன் (திருவண்ணா மலை), பி.ராமர் (தர்மபுரி), மாநில செயற் குழு உறுப்பினர்கள் சி.பச்சை யப்பன், எம்.விஜயன் ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். இதில் தமிழக அரசு தொழிலாளர்களு டனான ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட குறைந்தபட்ச ஊதியம் ரூ. 11401 வழங்க வேண்டும், சம்பள பட்டுவாடா சட்டப்படி ஊதியத்தை வங்கி மூலம் வழங்கிட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், மேலும் இஎஸ்ஐ, இபிஎப் ஆகியவற்றை முறைப்படி வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.