districts

சென்னையில் பிடிபட்ட 284 மாடுகள் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

சென்னை,ஆக.18-

     சென்னையில் கடந்த வாரம் அரும்பாக் கத்தில் சாலையில் தாயுடன் நடந்து சென்ற பள்ளி சிறுமியை மாடு முட்டி தூக்கி வீசிய தில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு இடை யூறு செய்தால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர்  ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க 15 மண்டலங்களிலும் அதிகாரிகள் நடவடிக் கையில் இறங்கியுள்ளனர்.  

      இதுபற்றி மாநகராட்சி கால்நடை மருத்து வர் கூறும்போது, ‘சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து வருகிறோம். 2 வாரத்தில் 284 மாடுகள் பிடிபட்டன. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் மாட்டின் உரிமையாளர் விவரங்களை போலீசாரிடம் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் எச்சரித்து அனுப்புவதோடு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார். மாநகராட்சி நடவடிக்கை தீவிரமாக இருந்தாலும் சென்னையில் பல இடங்களில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. கிராமப் புறங்களில் திரிவது போல நகரத்தில் மாடுகள் கட்ட விழ்க்கப்பட்டு சாலையில் விடப்படுவதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சூளைமேடு பகுதியில் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் சாலையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. அத்துமீறும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

     விதிகளை மீறி சுற்றித்திரியும் மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய அதன் உரிமையாளர் மீது குற்ற வழக்கு பதிவு செய்தால்தான் மாடுகளை கட்டுப்படுத்த முடியும். சட்டங்களும், விதிகளும் கடுமையானால் தான் உரிமையாளர்களுக்கு பொறுப்பு வரும். அதுவரையில் மாடுகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவிக்கின்றனர்.