districts

img

துருப்பிடித்த மின் கம்பங்களை மாற்றக்கோரி திருவொற்றியூரில் வார்டு சபை தீர்மானம்

சென்னை, ஜன. 29- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் 6ஆவது வார்டு சபை கூட்டம் வார்டு குழு உறுப்பினர் எஸ்.கதிர்வேல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.  கூட்டத்தில் மகாலட்சுமி நகர்,  பாலாஜி நகர், முல்லை நகர்,  முருகப்பா நகர் பகுதி மக்கள் கலந்து கொண்டனர். மகாலட்சுமி நகர் பிரதான  சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்தது. பாலாஜி நகர் அருகில் அமைக்கப்பட் டுள்ள சாலையில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். அங்கு காவல் துறை பூத் அமைக்க வேண்டும். மெட்ரோ ரயில்  நிலையம் செல்லும் ஆட்டோ  மற்றும் இருசக்கர வாக னத்தில் செல்வோருக்கு ஐடிசி ரயில்வே கேட் திறக்க  வேண்டும். உட்புறச் சாலை கள் அமைக்க வேண்டும். ஜெய்ஹிந்த் நகர் பகுதிக்கு ஆயில் பாதித்த வர்களுக்கு இழப்பீடு வழங்க வில்லை. அதை வழங்க வேண்டும். ஆபத்தான நிலையில் மின்மாற்றிகளின் கம்பங்களை மாற்றிய மைக்க வேண்டும். முரு கப்பா நகரில் விடுபட்ட சாலைகளில் தார்சாலை அமைக்க வேண்டும். முருகப்பா குளம் பூங்கா  பராமரிக்கப்பட வேண்டும்.  முல்லைநகரில் பாது காப்பற்ற முறையில் கேஸ் குடோன் வைப்பதை தடுக்க வேண்டும். 5 நகர்களிலும் துரு பிடித்திருக்கும் 500க்கும் மேற்பட்ட மின் கம்பங் களை மாற்ற வேண்டும். மேலும் மணலி எக்ஸ்பிரஸ்  சாலையில் 3 கி.மீ தூரத்திற்கு இடைவெளியின்றி மையத் தடுப்பு அமைக்கப் பட்டுள்ளதால் முருகப்பா நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் பயணிகள் நகருக்கு செல்லும்போது விபத்துகள் ஏற்படுகிறது.

பலர் இருசக்கர வாகனத் தில் எதிர்திசையில் செல்ல  வேண்டிய நிலை உள்ளது.  சர்வீஸ் சாலை இல்லை. எனவே ஜோதி நகர் சந்திப் பில் மையத் தடுப்பை அகற்ற  வேண்டும் அல்லது இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். எர்ணாவூர் மேம்பாலம் இறங்கும் இடத்தில் ரவு ண்டானா அமைக்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பொது மக்களின் கேள்வி களுக்கு துறை வாரியாக அதிகாரிகள் பதில் அளித்த னர். மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் அனைத்து கேள்விகளையும் தொகுத்து மாநகராட்சி மண்டலக் குழுவிற்கு பரிந்துரை செய்தார். கூட்டத்தில்  வார்டு உதவி  பொறியாளர் அன்னலஷ்மி, மெட்ரோ உதவி பொறி யாளர் மதன்ராஜ், மின்துறை  எண்ணூர் உதவி பொறியா ளர் சுப்பிரமணி. போர்மேன்  விநாயகம். போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம், மாநகர தெரு விளக்கு பராமரிப்பு அலுவலர் பால் ஆன்ட்ரூஸ்,  சுகாதாரத் துறை அலுவலர் மணிமாறன்.  மார்க்சிஸ்ட் கட்சி  வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். கருணாநிதி,  பகுதிக்குழு உறுப்பினர் வெங்கடையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.