கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பச்சை நிற துண்டு அணிந்து மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று விவசாயிகளின் கோரிக்கைகளை ஆய்வு செய்தார். இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் எஸ்.ஜோதிராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பாதூர் கில்லனூர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.