திருவள்ளூர், அக்.17- திருவள்ளூர் காக்களூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள எப்எப்ஐபிஎல் பன்னீச்சர் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களின் 3 ஆண்டுக்குரிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அக் 13 அன்று சென்னை குற்றத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் வெற்றிச்செல்வி முன்னிலையில் கையெழுத்தானது. இதில் எப்எப்ஐபிஎல் தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு), தலைவர் அ.சவுந்தரராசன், உப தலைவர் கே.ஜி. முரளிதரன், பொதுச்செயலாளர் கணபதி, பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்ட னர். இந்த ஒப்பந்தம் 2022 ஏப்ரல் முதல் அமலுக்கு வரு கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.7 ஆயிரம் வரை கிடைக்கும். மேலும்ஊக்கத் தொகையாக மாதம் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர். காலமானார்