மதுராந்தகம் அடுத்த ஜானகி புரத்தில் இயங்கிவரும் பால்மர் லாறி வேன் ரீர் என்ற தொழிற்சாலையில் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் பி.மாசிலாமணி, பொன்னுசாமி, நடராஜன், ரமேஷ் உள்ளிட்ட பலர் பேசினர்.