கடலூர், பிப்.2- கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே முருகன்குடி கிராமத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சம்பத்குமார். இவர் மணிமொழி என்பவரிடம் முதியோர் உதவித் தொகை மற்றும் வாரிசு சான்றுக்கு ரூ.4500 லஞ்சம் கேட்டுள்ளார். கொடுக்க விருப்பம் இல்லாத மணி மொழி கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, முருகன் குடி கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் சம்பத்குமாரிடம் மணி மொழி பணம் கொடுக்கும் போது கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் காவலர்கள் கைது செய்தனர்.