இந்தியா கூட்டணி சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் சனிக்கிழமையன்று (மார்ச் 30) கே.கே.நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். ஏ.எம்.வி.பிரபாகரராஜா எம்எல்ஏ, திமுக நிர்வாகிகள் க.தனசேகரன், கண்ணன், ராசா, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் இ.ரவி உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.