இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளர் ஜெகத் ரட்சகனுக்கு திருத்தணி நகரப்பகுதிகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. திருத்தணி 14,15 வார்டுகளில் திமுக முன்னாள் மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.பூபதி தலைமையில் நகர செயலாளர் வினோத் குமார், சிபிஎம் வட்டச் செயலாளர் அந்தோணி, மாவட்டக் குழு உறுப்பினர் அப்சல் அகமத், வட்டக் குழு உறுப்பினர்கள் பாலாஜி, கரிமுல்லா, ரீசர் ஜெய வேல், நரசிம்மன் ஆகியோர் பங்கேற்ற வாக்கு சேகரித்தனர்.