districts

img

தமிழகப் புலவர் குழு தலைவராக விஐடி வேந்தர் தேர்வு

வேலூர், ஜூலை 30-

    65 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட தமிழகப் புலவர் குழுவின் 115 வது கூட்டம் சென்னையில்  நடைபெற்றது. காப்பாளர் நீதியரசர் வள்ளிநாயகம், துணைத் தலைவர்கள் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், முனைவர் மறைமலை இலக்குவனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் மணிமேகலை கண்ணன் வரவேற்றார்.  

     புதிய தலைவராக விஐடி பல்கலைக்கழக வேந்தரும் தமிழியக்க தலைவருமான முனைவர் கோ.விசுவநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

     நீதிபதி பாஸ்கரன், விஜிபி சந்தோஷம், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை நா.அருள், கதிரேசன், திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து புலவர்கள் , எழுத்தாளர்கள் , பேராசிரியர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.