சென்னை, ஏப். 12 - தேர்தல் களத்தில் பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக வேலை செய்து கொண்டிருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு வியாழன்று (ஏப்.11) எம்ஜிஆர் நகரில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: இந்த தேர்தல் சங் பரிவார் கும்பலுக் கும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் சக்திகளுக்கும் இடையே நடக்கும் மிகப் பெரிய யுத்தம். தேசத்தின் பாது காப்பை உறுதிப்படுத்த நடத்தப்படும் இந்த தர்ம யுத்தத்தில் மக்களே வெல் வார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அளவில் தனது தேர்தல் எல்லையை சுருக்கிக் கொள்ளாமல் விரிந்த பார்வையோடு செயல்படு கிறார். அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமியையும் எப்போதும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஏனென் றால் தேர்தல் களத்தில் கூட அதிமுக, பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகி றது. அதை எடுத்துக்காட்டும் விதமாகத் தான் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக, மோடியை விமர்சிக்கவில்லை. பாஜகவோடு திமுக கூட்டணி வைத்திருந்தால் செந்தில் பாலாஜி சிறைச்சாலைக்கு சென்றிருக்க தேவையில்லை. பொன்முடி அமைச்சர் பதவியை இழந்திருக்க மாட்டார். திமுகவினர் வீடுகளில் வருமான வரி சோதனையே நடந்திருக்காது. எனவே, நாடும், ஜனநாயகம் காப்பாற்ற வேண்டும். அதற்கு இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். பாசிச பாஜக அரசை வீழ்த்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.