ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் குலத்தொழில் திட்டத்தை கொண்டு வந்துள்ளதை எதிர்த்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெள்ளியன்று (செப்.22), திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் இ.எழிலரசன் தலைமையில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், விச மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், விசிக மாநில தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர், நமது தேசம் கட்சியின் மாநில தலைவர் லட்சுமிபதி ஆகியோர் பேசினர். விசிக அரசியல் குழு உறுப்பினர் எஸ்.நீலவானத்து நிலவன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். சிபிஎம் நகர் கிளை செயலாளர் உதயநிலா நன்றி கூறினார்.