districts

img

பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க கடிகாரம் விழுப்புரம் மாணவிகள் கண்டுபிடிப்பு

விழுப்புரம், ஆக.4-

      விழுப்புரம்-புதுவை சாலை காந்தி சிலை அருகே உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆண்டு ராஜஸ்ரீ, நிவேதா ஆகிய 2  மாணவிகள் 12 ஆம் வகுப்பு படித்தனர்.  அவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் எச்சரிக்கை கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர்.

     அதன்படி, கடிகாரம் ஒன்றை அவர் கள் கண்டுபிடித்தனர். அந்த கடி காரத்தில் குளோபல் புரொடக்ஷன் சிஸ்டம் (ஜிபிஎஸ்) மற்றும் சிம்கார்டு  பொருத்தப்பட்டுள்ளது. இந்த கடி காரத்தை கையில் அணிந்திருந்ததால் யாராவது உங்களை நெருங்கி வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றால் அல்லது நகைகள் பறிக்க முயற்சித்தால் இந்த கடிகாரத்தில் பொருத்தப்பட்டுள்ள பட்டனை அழுத்தி னால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத் திற்கு தகவல் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர்.  

     மேலும் அலாரம் அடிக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர். இந்த  அலார சத்தத்தினால் அருகில் உள்ள வர்கள் ஓடி வந்து காப்பாற்றும் வகை யில் உருவாக்கப்பட்டுள்ளது.

     இது குறித்து மாணவிகள் ராஜஸ்ரீ, நிவேதா ஆகியோர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறார். அதன்படி நாங்கள் அறிவுப் பூர்வமாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.  

    விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள  மக்கள் இன்னும் செல்போன் வசதி கூட  இல்லாமல் உள்ளனர். செல்போன் வசதி இருந்தால் தங்களுக்கு ஏற்படும்  இடர்பாடுகள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பார்கள். ஆனால், கிராம மக்களிடம் போதிய செல்போன்  வசதி இல்லாததால் நாங்கள் புதிதாக  இந்த கருவியை கண்டு பிடித்துள் ளோம்.  

    எங்களுடைய இந்த கண்டு பிடிப்புக்கு பள்ளி தலைமை ஆசிரியை  சசிகலா, அறிவியல் ஆசிரியை ஜோ சப்பின் ஆகியோர் ஊக்கமளித்தார்கள்.

     இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.  தலைமை ஆசிரியை சசிகலா கூறியதாவது:-  

    தமிழ்நாடு முதலமைச்சர் அறிவியல்  கண்டு பிடிப்புகளை ஊக்குவிக்கும்படி அறிவித்துள்ளார். அதன்படி, கடந்த  ஆண்டு தமிழ்நாட்டில் 26 ஆயிரம்  புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட 10 புதிய கண்டுபிடிப்புகளில் எங்கள் பள்ளி மாணவிகள் கண்டுபிடித்த கைக்கடிகாரம் இடம் பிடித்துள்ளது.  

     இதற்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பு இந்த மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் இதனை வழங்கினார். இந்த கண்டுபிடிப்பு தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

     இவ்வாறு அவர் தெரிவித்தார்.