districts

விழுப்புரம் அரசு கல்லூரியில் இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை

விழுப்புரம்,செப்.21- விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் இறுதிகட்ட மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் சிவக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு வருமாறு:- விழுப்புரம் அறி ஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி யில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை, இளம் அறி வியல் மற்றும் மொழி பாடப் பிரிவுகளில் எஞ்சியுள்ள இடங்களை நிரப்புவதற்காக இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.  இணையதளம் மூலம் ஏற்கனவே விண்ணப்பித்த வர்கள் மட்டும் மாணவர் சேர்க்கையில் பதிவு செய்ய முடியும். அதன்படி வெள்ளிக்கிழமை (செப்.23) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பி.எஸ்சி. அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.  24 ஆம் தேதி (சனிக் கிழமை) பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொரு ளியல், பி.காம். பாடப்பிரிவு களுக்கும், 28 அன்று காலை 10 மணிக்கு பி.எஸ்சி. அனைத்து பாடப்பிரிவு களுக்கும் மாணவர் சேர்க்கையும், 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு பி.ஏ., பி.காம். பாடப் பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.  கல்லூரி வளாகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். சேர விரும்பும் மாணவர்கள் அதனை பூர்த்தி செய்து சாதிச்சான்றிதழ் நகல், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவற்றை இணைத்து கல்லூரியில் சமர்பிக்க வேண்டும்.  இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை விண்ணப்பம் பதிவு செய்த வர்கள் மட்டுமே மாண வர் சேர்க்கையில் கலந்து கொள்ள முடியும்.  இவ்வாறு தெரிவித்திருக் கிறார்.

;