districts

img

விழுப்புரம்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

விழுப்புரம், ஏப்.20- விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் பதிவான  வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதிகளிலிருந்து வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.  அங்குள்ள பாதுகாப்பு அறையில்  அந்த பெட்டிகளை  வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் சி.பழனி  வெள்ளியன்று  நள்ளிரவு பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வாக்கு பெட்டி வைக்கபட்ட  அறைக்கு சீல் வைத்தனர். அப்போது மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் தீபக் சிவாச்,மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன்,திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம்,விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் பரிதி உட்பட பலர் உடனிருந்தனர்.