districts

img

செங்கொடியின் போராட்டத்தால் பட்டா பெற்ற கிராம மக்கள்

திருவண்ணாமலை, செப். 23- திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு, நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில், ஏழை, எளிய மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வீடுகளை இழந்து தவித்து வந்த மக்களுக்கு ஆதரவாக களம் கண்ட செங்கொடி இயக்கத்தின் நீண்ட நெடிய  போராட்டத்தின் விளைவாக, வெள்ளியன்று  பழங்குடியின  மக்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த பட்டியந்தல் கிராமத்தில் 42 குடும்பங்கள் குடியிருந்த வீடு களை, நீர்நிலை புறம்போக்கு, நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட நிர்வாகம் இடித்து  தரைமட்டமாக்கியது. அந்த சம்பவத்தை   கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக  சார்பில், கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். வசிக்க வீடும், உண்ண உணவும் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் பரிதவித்து வருகின்றனர். மக்களுக்கு மாற்று  இடம் வழங்காமல்,  தமிழக முதலமைச்சர், நில எடுப்பு ஆணையர் ஆகியோரின் உத்தரவுகளை மதிக்காமல் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்த துடன்,  அவர்களுக்கு பட்டாவுடன் கூடிய மாற்று இடம் வழங்கும் வரை  போராட்டம் தொடரும் என்று அறிவித்தது .

அதைத் தொடர்ந்து போராட்டக் காரர்களுடன், அரசு அதிகாரிகள் போச்சு வார்த்தை நடத்தினர். அதில், வீடு அகற்றப்பட்ட குடும்பத்தினருக்கு அதே  ஊராட்சியில், இன்னும் சில தினங்களுக்குள் குடியிருக்க இடம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் கூறியபடி, மக்களுக்கு மாற்று இடமோ, வீட்டுமனை பட்டாவோ வழங்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கையாக சிபிஎம் , விசிக  சார்பில், பட்டியந்தல் காளியம்மன் கோயில் அருகிலிருந்து ஆட்சியர் அலுவல கம் வரை நடைபயண இயக்கம் நடத்தப் பட்டது. அந்த நடைபயண துவக்கத்தின் போது அங்கு வந்த ஆரணி கோட்டாட்சி யர் தனலட்சுமி மற்றும் கடலாடி காவல்துறை யினர், நடைபயண இயக்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 30 குடும்பத்தின ருக்கும் ஒரு மாத காலத்திற்குள் பட்டியந்தலில் இடம் தேர்வு செய்து பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதை ஏற்று அப்பொழுது நடைபயண இயக்கம் ஒத்தி வைக்கப்பட்டது. வெள்ளியன்று பட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், விசிக  மண்டல செயலாளர் பு.செல்வம், ஒன்றிய செயலாளர் பி. சுந்தர், ராஜா, கலசப் பாக்கம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கே.கே.வெங்கடேசன், ச.குமரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.