districts

img

அரசு ஆரம்பப் பள்ளியை மூடுவதை கைவிட கிராம மக்கள் வேண்டுகோள்

மதுராந்தகம், மார்ச் 18- மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி அரசு ஆரம்பப் பள்ளியை மூடும் நடவடிக் கையை கைவிட வேண்டும் என கயநல்லூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம்,  செய்யூர் வட்டம் சித்தாமூர் ஊராட்சிக்குட்பட்ட கயநல்லூர் கிராமத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டவர் கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்து மக்களுக்காக கயநல்லூரில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்ககப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த காலங்களில் ஏராளமான மாணவர்கள் பயின்று வந்துள்ளனர். தற்போது இப்பள்ளியில் 11 மாணவ- மாணவியர்கள் மட்டுமே பயின்று வருவதாக கூறப் படுகின்றது. இவர்களுக்காக ஒரு ஆசிரியர் மட்டும் பணி யாற்றி வருகிறார். மேலும் பள்ளியில் பணியாற்றி வந்த மற்றொரு ஆசிரியர் மாற்று இடத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மாணவர் களின் எண்ணிக்கை குறை வாக இருப்பதை காரணம்  காட்டி இப்பள்ளியை மூடுவதற்கு பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து  வருவதாக தெரியவருகி றது. இதனைத் தொடர்ந்து பள்ளியை மூடும் நடவடிக் கையை கைவிட வலியுறுத்தி  கிராம பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் ஞாயிறன்று (மார்ச்  17) பள்ளி வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் மாநில பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கலந்து கொண்டு  சிறப்புரை யாற்றினார்.  இந்த கூட்டத்தில்  மார்க்சிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டச் செயலாளர் எஸ்.ரவி, தமுஎகச மாவட்ட செயலாளர் கவிசேகர் உள்ளிட்ட கிராம மக்கள் கருத்துரை வழங்கினர். மேலும் இக்கூட்டத்தில் பள்ளியை மூடும் நடவடிக் கையை பள்ளி கல்வித் துறை கைவிட வேண்டும்  என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும் அரசு துவக்கப்பள்ளி பாது காக்க ஒரு குழு ஒன்று  அமைக்கப்பட்டு கிராமத் தில் பள்ளியின் மாணவர் சேர்க்கை குறித்து பிரச்சா ரம் மேற்கொள்ளவும் பள்ளிக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்திடவும், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வைகளை வாங்கி பள்ளியை  தொடர்ந்து செயல்படுத்திட முடிவு செய்யப்பட்டது.