districts

img

சிறந்த பேரூராட்சியாக விக்கிரவாண்டி பேரூராட்சி தேர்வு

விழுப்புரம்,ஆக.17-

    விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த பேரூராட்சியாக தேர்வான விக்கிரவாண்டி க்கு ரூ.20 லட்சம் பரிசு, மற்றும் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 489 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகள் செயல்பாட்டை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு, ஆண்டு தோறும் சிறப்பாக செயல்படும் முதல் 3 பேரூராட்சிகளை தேர்வு செய்து, சுதந்திர தின விழாவில் விருது மற்றும் பரிசு வழங்கி வருகிறது.

   அதன்படி, இந்த ஆண்டு பேரூராட்சியில் சுகாதாரம், துப்புரவு பணி, வரி வசூல், கழிவறை வசதி, வளர்ச்சி திட்ட பணிகள் இவற்றில் முதலிடம் பிடித்த விக்கிரவாண்டி பேரூராட்சி தமிழ்நாட்டில் சிறந்த முதல் பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டது.  

    இதையடுத்து சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம், செயல் அலுவலர் ஷேக் லத்தீப் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகையை ரூ.20 லட்சம் பரிசு ஆகியவற்றை வழங்கினார்.

     விருது பெற்ற பேரூராட்சி தலைவர் அப்துல் கலாமுக்கு துணைத் தலைவர் பாலாஜி, நியமனக் குழு உறுப்பினர் சர்க்கார் பாபு மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பழனியிடம் விருது மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்.