விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன் ஆகியோர் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், விக்கிரவாண்டி நகர திமுக செயலாளர் நைனார் முகமது , விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை உள்பட பலர் கலந்துகொண்டனர். மாம்பழப்பட்டு கிராமத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார். விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.லட்சுமணன், காணை ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கல்பட்டு ராஜா மற்றும் உள்ளுர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.