districts

img

ஆமை வேகத்தில் நகரும் விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை நெய்வேலியில் சாலை மறியல் நடத்த முடிவு

கடலூர், பிப்.4- விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் 6 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் 500க்கும் மேற்பட்ட விபத்துகளில் 100க்கும் மேற்பட்ட மரண மடைந்துள்ளனர்.  இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. அப்போது, 2023 ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடிப்பதாக தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவன அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்தனர். இந்த நிலையில் தொடர்ந்து 2 ஆண்டு காலமாக போராட்டங்கள் நடத்தியும் பணிகள் முடிவுக்கு வரவில்லை. எனவே, சாலை பணிகளை விரைந்து முடிக்க ஒன்றிய-மாநில அரசுகளை வலி யுறுத்தி பிப். 9 நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது வி. முத்துவேல் தலைமையில் நடைபெற்ற நெய்வேலி போராட்டக் குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.