districts

img

விக்ரம ராஜா சிங்கே நினைவிடம் அரசு செயலர் ஆய்வு

வேலூர். ஆக 11 -

    வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரை யில் அமைந்துள்ள இலங் கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜா சிங்கே நினைவிடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் ஆர்.செல்வராஜ் வெள்ளியன்று (ஆக. 11) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

     அப்போது, இந்த நினைவு மண்டபத்தை நாள்தோறும் தூய்மையாக பராமரிக்க வேண்டும், சுற்றுலா பயணிகள் பார்வையிட வரும் பொழுது மன்னர் குறித்த விவரங்களை எடுத்துரைக்க வேண்டும் என்றும் காப்பாளருக்கு அறி வுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சி யர் பெ.குமாரவேல் பாண்டியன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.