செய்யூர், மார்ச் 27- காஞ்சிபுரம் மக்களவை (தனி)தொகுதிக்கு திமுக வேட்பாளர் செல்வம் செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள லத்தூர் ஒன்றியத்தில் புதனன்று தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோர் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தனர். இதைத் தொடர்ந்து வேட்பாளர் செல்வம், கூவத்தூர், பவுஞ்சூர், திருவாதூர், வெளிக்காடு,செங்காட்டூர், நெம்மந்தம், கொடூர், முகை யூர், உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் நின்றபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக தொகுதிப் பொறுப் பாளர் பாஸ்கர் சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பாபு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் தசரதன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெய லட்சுமி மகேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் ராமமூர்த்தி, குப்புசாமி,இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாபு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மோகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுபலட்சுமி பாபு, முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் கிருஷ்ண வேணி தணிகாசலம், ஏமா நாதன், மீனவர் அணி அமைப் பாளர் பாரத், அயலக அணி மாவட்ட துணை அமைப்பா ளர் பாரதி பாபு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்க ளவைத் தொகுதி பொறுப் பாளர் இ.சங்கர் செய்யூர் வட்டச் செயலாளர் எஸ்.ரவி கூட்டணி கட்சி நிர்வாகிகள் தமிழனின், ஆதவன், தாமோதரன், மாரிமுத்து, புரட்சி மாறன், கார்வேந்தன், பக்தன், ரவி, கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிலட்சுமி ஞானவேல் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.