வடசென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் அ.வெற்றியழகன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.