விழுப்புரம், மார்ச் 6- கூலி உயர்வு வழங்க கோரும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி விழுப்புரம் அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு சுமைப்பணி சங்க மாவட்டத் தலைவர் எம்.பழனி தலைமை தாங்கினார். ஜி.பன்னீர் செல்வம்(அம்பேத்கர் சுமை தூக்கும் தொழிலாளர் நல சங்கம்), இ.சங்கிலி தேவன் (லாரி சுமை தூக்கும் தொழி லாளர் நல சங்கம்), எஸ்.முத்துக் குமரன், ஆர்.மூர்த்தி, பி.பால கிருஷ்ணன் (சிஐடியு), பி.குமார் (சுமைப்பணி சம்மேளனம்), ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். விழுப்புரம் நகரத்தில் வியா பாரிகளின் வியாபாரப் பொருட்களை காலங்காலமாக ஏற்றி, இறக்கி வரும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை, இதற்காக பல முறை வியாபாரிகளிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் அலட்சியப்படுத்தி வந்தனர். இந்நிலையில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லாத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை தொழி லாளர் தீர்ப்பாயம் கடந்த 16.2.23 அன்று கூலி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி யது. ஆனால் இதுவரை கூலி உயர்வு வழங்க வில்லை. இதனையடுத்து 30.10.2023 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது. இருப்பினும் பலனில்லை, அதனால் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் வியாபாரி சங்கத்துடன் பேச்சு நடத்தி கூலி உயர்வு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.