விடுதலைப் போராட்ட வீரர், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் , தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பேரவைக் கூட்டம் (ஜன.26) வெள்ளியன்று திருப்பெரும்புதூரில் வட்டச் செயலாளர் ப.வடிவேலன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் பி.சுந்தரராஜன் உருவப் படத்தை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ், வட்டக்குழு உறுப்பினர்கள் கே.முகமது கனி, பி.செல்வராஜ், எம்.தினகரன், செ.மலர்கொடி, ஆர்.சுகுந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.