வேலூர். மார்ச் 4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட குழு சார்பில் நிதிய ளிப்பு கூட்டம் வேலூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.ஆறு முக நயினார், எஸ்.டி.சங்கரி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், செ.ஏகலை வன் கே.ஜே.சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட குழு, வட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டகுழு சார்பாக, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் நிதி வழங்கப்பட்டது பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், நாடு முழுவதும் இந்தியா கூட்டணி தற்போது ஒவ்வொரு மாநிலமாக தில்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொகுதி உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக முழுமை யாக தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறோம். பாஜக அரசு இந்த ஆட்சியில், 5சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து நாட்டின் அடிப்படைத்தன்மையை சிதைத்து விட்டது. குறிப்பாக ரூ20 ஆயிரத்திற்கு மேல் தேர்தல் நிதி வாங்கினால் அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை திருத்தி ஆயிரக்கணக்கான கோடிகளை பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலமாக வாரிசுருட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக அம லாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவைகளை அனுப்பி மிரட்டி வணிக நிறுவனங்களிடம் அதிக நன்கொடை பெற்றுள்ளனர். இதனால் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களாக நிதி பெற்றது செல்லாது, அதனை திருப்பி அளிக்க வேண்டும் எனவும், பாரத ஸ்டேட் வங்கி எந்தெந்த கட்சிகள் யாரிடம் எவ்வளவு நிதி பெற்றது என்ற விவரத்தை அறிவிக்க கோரியுள்ளது. ஆனால் பிரதமர் மோடியும், பாஜகவினரும் இதுகுறித்து வாய் திறக்காதது ஏன், மேலும் பாஜக வீழ்த்த முடியாத சக்தி ஒன்றும் இல்லை, பிரதமர் ஏதேதோ பிதற்றுகிறார். எப்படி இருந்தாலும் பாஜக தமிழ கத்தில் காலூன்ற முடியாது. தமிழகத்தில் போதை பொருட்கள் கடத்தல் குறித்து அர சாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆந்திராவில் பாலாறு தடுப்பணை விவகாரம், காவிரி ஆறு பிரச்சனைகளில் தமிழ்நாடு அரசு வழக்கு நடத்தி முழுமையாக தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படு வது குறித்த கேள்விக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பாக தேர்தல் ஆணையத்திடம் மின்னணு வாக்கு பதிவு இயந்தி ரத்தில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். மனுவில் தற்போது நடை முறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் ஒப்புகை சீட்டு கண்ட்ரோல் யூனிட் என்ற வரிசையை மாற்றி வாக்குப்பதிவு இயந்தி ரம், கண்ட்ரோல் யூனிட் இறுதி யாக ஒப்புகைச்சீட்டு வழங் கும் இயந்திரம் என்று மாற்றிய மைக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டு எண்ணிக்கை யுடன் கண்ட்ரோல் யூனிட் சரிபார்க்க வேண்டும். அப்படி எண்ணிக்கை சமமாக வர வில்லையெனில் அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் ஆணையத்திடம் சிபிஎம் வலியுறுத்தியுள்ளதாக ராமகிருஷ்ணன் மேலும் கூறி னார்.