வேலூர், நவ.17- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ப.சக்திவேல் உடல்நலக் குறைவால் வெள்ளியன்று (நவ.17) காலமானார். அவருக்கு வயது 56. மறைந்த தோழர் சக்தி வேல் கடந்த 1989ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் உறுப்பி னராக சேர்ந்தார். 2005 முதல் கட்சியின் முழுநேர ஊழி யராக செயல்பட்டு வந்தார். 1996 முதல் 2002 வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயலாள ராகவும், 2007 முதல் 2021 வரை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயலாளராகவும், தற்போது வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட தலை வராகவும் செயல்பட்டு வந்தார். மறைந்த சக்திவேல் உட லுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி செங்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.பி.ராமச்சந்திரன், கே.சாமிநாதன், பி.காத்த வராயன், செ.ஏகலைவன், கே.ஜெ.சீனிவாசன், மாவடக் குழு உறுப்பினர் கள் பி.குண சேகரன், எஸ்.சுரேந்திரன், பெ.திலீபன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று இறுதி நிகழ்வு சனிக்கிழமை (நவ.18) மாலை 3 மணிக்கு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி கிராமம் அசோக் நகர் புது மனை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடை பெறுகிறது. முன்னதாக, பிற்பகல் 1.30 மணிக்கு கட்சியின் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது. மறைந்த தோழர் சக்தி வேலுக்கு மஞ்சுளா என்ற மனைவியும், சுகதேவ், சூர்யா என இரு மகன்கள் உள்ளனர். சாமி. நடராஜன் இரங்கல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வெளி யிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில்,“ தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர். ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பிரச்சனைகளில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். அவ ருடைய மறைவு விவ சாயிகள் இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவருக்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலக்குழுவின் சார்பில் வீரவணக்கம் செலுத்து கிறோம். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தின ருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரி வித்திருக்கிறார். ஆர். கருமலையான் சிஐடியு அகில இந்திய செயலாளர்களில் ஒரு வரான ஆர்.கருமலையான், தோழர் சக்திவேல் மறைவுக்கு இரங்கல் தெரி வித்துள்ளதுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியின் வேலூர் மாவட்ட குழுவுக்கு ஆறுதலும் தெரிவித்திருக்கிறார்.