districts

img

சென்னையில் நேற்றும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

சென்னை, நவ. 11- தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திரண்ட மக்கள் கூட்டத்தால் சென்னையில் சனிக்கிழமையும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன. 1 கி.மீ. செல்ல 4 மணி நேரம் வரை ஆனது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை ஞாயிறன்று கொண்டாடப் படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள்  தீபாவளி பண்டிகையை கொண்டாடு வதற்காக சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து  வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. சென்னையில் இருந்து இயக்கப் பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள்,  சிறப்பு வந்தே பாரத் ரெயில்கள் ஆகி யவையும் உடனடியாக நிரம்பின.

அதிகாலை 2 மணி வரை

மேலும் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகள், அரசு சிறப்பு பேருந்து கள் ஆம்னி பேருந்துகள் ஆகிய வற்றில் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்ற வர்களும் தீபாவளிக்கு ஒரு நாளுக்கு முன்பு சொந்த ஊரில்  இருக்கும் வகையில் வெள்ளிக் கிழமை புறப்பட்டு சென்றனர். சொந்த ஊருக்கு செல்ல ஒரே  நேரத்தில் திரண்ட மக்கள் வெள்ளத் தால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்னையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 6 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல்  சனிக்கிழமை அதிகாலை 2.15 மணி வரை சுமார் 10 மணி நேரத்துக்கு  மேல் நீடித்தது. அரசு போக்குவரத்து கழகம்  சார்பில் வெள்ளியன்று இரவு   சென்னையில் இருந்து வழக்கமாக  இயக்கப்படும் 2100 பேருந்து களுடன், கூடுதலாக 1895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் பிறகு பயணிகள் வருகை அதிகரித்ததால் கூடுதலாக 138 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆம்னி பேருந்துகளை பொறுத்த வரை வழக்கமாக இயக்கப்படும் 900  பேருந்து களுடன் கூடுதலாக 700 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்  பிறகும் பயணிகள் வருகை இருந்ததால் மேலும் 80 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இது தவிர கார்கள் உள்பட சொந்த  வாகனங்களிலும் வெள்ளிக் கிழமை மாலையும் சனிக்கிழமை காலையும்  ஏராளமானோர் சென்னை யில் இருந்து புறப்பட்டு சொந்த  ஊருக்கு சென்றனர். வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களை விட நேற்று 2 மடங்கு வாகனங்கள் ஒரே நேரத்தில்  சென்றன. இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலை கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின. பெருங்களத்தூர் வழியாக சென்ற பேருந்துகளும் மற்றும் வாகனங்களும், வெளிவட்டச்சாலை வழியாக சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்களும் வண்டலூர் பகுதியில் ஒரே நேரத்தில் சாலையை கடக்க திரண்டதால் அங்கு கடும்  போக்குவரத்து நெரிசல் உருவா னது.

அணிவகுத்த வாகனங்கள் 
 

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளி வட்ட சாலை பகுதியில் வாகனங் கள் அணிவகுத்து நின்றன. வண்ட லூர் அருகேயுள்ள டோல்கேட்டில் இருந்து வண்டலூர் வரை சுமார்  ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாக னங்கள் செல்ல முடியாமல் சாலை யிலேயே அணிவகுத்து நின்றன.  இந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தை வாகனங்கள் கடக்க சுமார் 3 மணி  நேரம் முதல் 5 மணி நேரம் வரை  ஆனது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடுமை யாக அவதிப்பட்டனர். இரவு 2.15 மணிக்கு மேல்போக்கு வரத்து சீரனாது குறிப்பாக மறைமலைநகரில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிங்கப்பெருமாள் கோவில்  பகுதியில் பாலப்பணிகள் வேலை நடைபெறுகிறது. மேலும் அந்த பகுதியில் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் சாலையில் ரயில் தண்ட வாளத்தை கடக்க வாகனங்கள் சுமார்  10 நிமிடம் முதம் 30 நிமிடம் வரை காத்திருந்தன. தண்டவாளத்தை கடக்கும் வாகனங்களும் அதிக அளவில் வந்ததால் சிங்கபெருமாள் கோவில்  பகுதியில், சென்னை- திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி யில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் அந்த இடத்தை கடக்க அதிக நேரம் ஆனது. இதனால்  சென்னை நகரில்  இருந்து சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடினார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட  பகுதிகளில் போலீசார் போக்கு வரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.