districts

img

மழைக்காலத்தில் சாமல்பட்டி தரைப்பாலத்தில் சிக்கும் வாகனங்கள்

கிருஷ்ணகிரி, அக்.10-  கிருஷ்ணகிரி-தேசிய நெடுஞ்சாலையில் ஊத்தங் கரை வட்டம், சாமல்பட்டி ரயில் பாதை அடியில் தரை  பாலம் உள்ளது.  அனைத்து வாகனங்க ளும் இதில் நுழைந்து தான் மறுபாக்கம் செல்ல வேண்டும்.  மழை பெய்யும் போது தரைப்பாலத்தில்  நீர் வடிவதற்கு சரியான  கால்வாய்கள் இல்லாததால் 3 அடி வரை உயரம் வரை மழை நீர் தேங்கி நிற்கும். இதனால் தரைப் பாலம் கட்டியது முதலே சிறு மழை பெய்தால் கூட பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வர முடியவில்லை. கடந்த நான்கு நாட்க ளாக ஊத்தங்கரை சாமல் பட்டி பகுதியில் கனமழை பெய்த நிலையில் பாலத்தின்  அடியில் மழை நீர் வடியாமல்  3 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கிறது. இதன் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி வந்த  தனியார் பேருந்து நீருக்குள்  சிக்கி பழுதாகி நின்றது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்து ஜேசிபி மூலம் கட்டி வெளியே கொண்டு வரப்பட்டது.   பாலம் கட்டியது முதல் தேங்கும் மழைநீர் உடனடி யாக வடிவதற்கு ஏற்பாடு இல்லை. எனவே சாமல்பட்டி தரைப் பாலத்தில் மழை நீர் தேங்காமல் உடனடி யாக வருவதற்கு ஏற்றார்  போல் நெடுஞ்சாலைத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வ லர்கள், வாகன ஓட்டு நர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.