districts

‘புஷ்புல்’ரயில் சோதனை ஓட்டம்

‘புஷ்புல்’ரயில் சோதனை ஓட்டம்

சென்னை, அக்.27- நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் மார்க்கங்களில் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்க ப்பட்டது. இந்த ரயில் அதிக கட்டணம் என்பதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதை போக்கும் வகை யில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் போன்று ‘புஷ்புல்’ என்ற புதிய ரயிலை வடிவமைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து சென்னை ஐசி எப்பில் ‘புஷ்புல்’ ரயில் பெட்டிகள் வடி வமைக்கப்பட்டது. அதன் சோதனை ஓட்டம் சென்னை-அரக்கோணம் இடையே நடந்தது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

இந்த ரயில் சோதனை ஓட்டம் 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை- அரக்கோணம் இடையே நடத்த ப்பட்டது. சென்னை ஐ.சி.எப்பில் வடிவமைக்கப்பட்ட இந்த பெட்டிகளில் செல்போன் சார்ஜர், குஷன் சீட், நவீன கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

ஒரே நேரத்தில் ரயில் முன்புறம் மற்றும் பின்புறம் பொருத்தப்பட்ட இன்ஜினை இயக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 22 பெட்டி களுடன் கூடிய இந்த ரயிலில் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதால் அனைவரும் பயன்படுத்தலாம். விரை வில் இந்த ரயில் சேவை தொடங்கப் பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

டாஸ்மாக் பார் ஏலம்:  நவ.1 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, அக்.27- சென்னை மண்டலத்திற்குட்பட்ட 17 மாவட்டங்களில் சென்னை தெற்கு, மத்தியம், வடக்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு மது பான கடைகளுடன் இணைந்த பார்க ளுக்கான உரிமம் கடந்த 31.8.2022 அன்றுடன் முடிவடைந்தது. 

மது கூட உரிமையாளர்கள் நீதி மன்றத்திற்கு சென்றால் அடுத்த டெண்டர் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடத்தப்படாமல் இருந்தது. தற்போது, நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு முடிவுற்ற நிலையில் டாஸ்மாக் நிறு வனமானது இ-டெண்டர் மூலம் மது கூடத்திற்கான டெண்டரை நடத்த முடிவு செய்து கடந்த 7 ஆம் தேதி தொடங்கி அக்.27 ஆம் தேதி பிற்பகல் 2 மணி  வரை விண்ணப்பிக்கலாம் என அறி விக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் 1 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க லாம் என மது கூட உரிமையாளர் களுக்கு கால அவகாசம் நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஆளுநர் ரவிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்  

சென்னை, அக். 27- தமிழ்நாடு அரசு மீது பழி சுமத்தும் ஆளுநருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்தி ருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதா வது:- ஆளுநர் மாளிகைக்கு வெளியே நின்று பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை ஆளுநர் மாளிகையை நோக்கி ஒருவர்  வீசி இருக்கிறார். அவர் மனநிலை சரி யில்லாதவர். அவர் தூக்கி எறிந்த பாட்டி லும் கவர்னர் மாளிகைக்கு வெளியே சாலையில் தான் விழுந்துள்ளது? இருப்பினும் இடத்தின் முக்கியத்துவம் கருதி உடனடியாக விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வரை கைது செய்து சிறையில் அடைத் திருக்கிறார்கள்.

விசாரணையில் தாமதம் ஏற்பட்டு இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யாமல் இருந்து இருந்தா லோ விசாரணை தாமதம் என்று கூற முடியும்.  ஆனால் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்ததை விசாரணை சரியில்லை என்று ஆளுநர் கூறுவது சரிதானா? இதுவரை ஆளுநர் மாளிகை காப்பாற்றி வந்த மரபுகளுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருக்கிறார்.

கண்ணை மூடிக் கொண்டு குறை சொல்வது மாநில அரசு மீது பழி போடுவதற்குத்தான். ஆளுநர் ஏன் இப்படி செயல்பட வேண்டும்? ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை. சரியாக விசாரிக்க வில்லை என்ற தவறான பிரசாரத்தை செய்து சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக மக்கள் மத்தியில் எண்ணம் உருவாகும் என்று நினைக்கிறார்.ஆனால், தமிழ்நாடு மக்கள் எல்லாம் தெரிந்தவர்கள். அரசியலை மிக நன்றாக புரிந்து வைத்திருப்பவர்கள். ஆளுநர் மக்களை தவறாக வழி நடத்துகிறாரா? அல்லது அவரை யாராவது தவறாக வழி நடத்துகிறார்களா? என்பது புரிய வில்லை என்று கூறப்பட்டுள்ளது.