திருவள்ளூர், பிப் 14- சிஐடியு தொழிற்சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், 13 நாட்களுக்கு பிறகு வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் கள் அனைவரும் புதன்கிழமை (பிப்.14) பணிக்கு திரும்பினர். 10ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை தொழி லாளர்கள் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிப் 2 முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி கேட் அமர்வு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புதனன்று. (பிப் 13) சென்னையில் துணை ஆணையாளர்கள் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வாக மாதம் ஒன்றுக்கு ரூ.1400 கூடுதலாக வழங்குவது, இ எஸ் ஐ சலுகை இல்லாதவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைப்பது, நிலுவைத் தொகை வழங்குவது போன்றவற்றை ஒப்புக் கொண்டது. சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி பொறுப்புக்கள் சம்பந்தமாகவும் ஒவ்வொரு ஆண்டுக்கான ஊதிய உயர்வு ஆகியவற்றை பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் காணுவது என வல்லூர் அனல் மின் நிலைய நிர்வாகத்தால் ஒப்புக் கொள்ளபட்டது. பணிநிரந்தரம் குறித்து நீதிமன்ற நடவடிக்கையை ஏற்றுக்கொள்வது தொடர்பாக நிர்வாகம் சங்கத்துடன் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2000 ஒப்பந்த தொழிலாளர்களும் பயனடை வார்கள் என தலைவர்கள் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், கிளை நிர்வாகிகள் சதிஷ், பிரபாகரன், சூரிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.