வேலூர். மார்ச் 23 - வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா தட்டப்பாறை கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி செந்தமிழ் சுர்ஜித் தலைமையில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பெ.திலீபன், மாவட்டப் பொருளாளர் எஸ்.கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.