தொழிலாளிவர்க்கத்தின் ஒப்பற்றத்தலைவராக கருதப்பட்ட மார்க்சியத் தலைவர் வி.பி.சிந்தன், தாம்பரம் தொகுதி முன்னாள் செயலாளர் க.வெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரது நினைவு தினம் புதனன்று (மே 8) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கட்சியின் தாம்பரம் பகுதிக்குழு அலுவலகத்தில் அவர்களது படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தாம்பரம் தொகுதி செயலாளர் தா.கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் மூத்த தலைவர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ராஜன் மணி உள்ளிட்டோர் பேசினர்.