districts

img

விவசாயியை தாக்கியவரை கைது செய்ய கோரி வி.ச மனு

விழுப்புரம், மார்ச்.4- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயி மீதான கொலைவெறித்தாக்குதல் நடத்தியவரை கைது செய்யக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று புகார் மனு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைகேற்பு நாள் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், பெரிய நொளம்பை கிராம உழவர் உற்பத்தியாளர் குழுவினர் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயின் மண்டையை உடைத்து சில நாட்க ளாகியும், குற்றவாளி மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என பாதிக்கப் பட்ட விவசாயி செஞ்சி காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஆர்.டி.முருகன் தலைமை யில் ஏராளமானோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் புகார் மனு கொடுத்த னர்.