districts

img

வீடுகளை விரைந்து கட்டித்தரக் கோரி மயிலாப்பூரில் பயனாளிகள் சாலை மறியல்

சென்னை, ஜன. 21 - வாரிய வீடுகளை விரைந்து கட்டிக் கொடுக்க கோரி, அப்பகுதி மக்கள் சனிக்கிழமையன்று (ஜன.21) மயிலாப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட னர். மயிலாப்பூர் பகுதி, வள்ளீஸ்வரன் தோட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய  அடுக்குமாடி குடியிருப்பு பகுதி உள்ளது. 40 ஆண்டு பழமையான வீடுகளை இடித்து விட்டு புதிய வீடு களை கட்டித்தர வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர் இயக்கம் நடத்தி யது. இதனைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு அந்த வீடு கள் இடிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு சுமார் 70 கோடி ரூபாய் செலவில் புதிய அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. 18 மாதத்தில் முடிக்க வேண்டிய பணி 40 மாதங் களை கடந்தும் முடிக்கப்படா மல் உள்ளது. இந்த கட்டுமான பணிகளை கடந்தாண்டு நவம்பரில் ஆய்வு செய்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாரிய அதிகாரிகள், ஒப்பந்தம் எடுத்துள்ள சிஎம்கே நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். 2022 டிசம்பர் மாதத்திற் குள் பணிகளை முடித்து ஒப்படைப்பதாக அந்நிறு வனம் உறுதி அளித்தது. அதன்படி கட்டுமானப் பணிகளை முடிக்கவில்லை. இந்நிலையில், கட்டு மானப் பணிகளை விரைந்து  முடித்து, வீடுகளை விரைந்து  வழங்க கோரி வள்ளீஸ்வரன் தோட்ட மக்கள் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்து வந்த காவல்துறை துணை ஆணையர்  மற்றும் வாரிய  அதிகாரிகள், சிஎம்கே நிறுவன தலைமை அதிகாரி  ஜெகதீசனுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை யில், ஏப்ரல் 28ந் தேதிக்குள்  பணிகளை முடித்து வாரியத் திடம் வீடுகளை ஒப்படைப் பதாக அந்நிறுவனம் உறுதி  அளித்தது. அதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், ஒரு மாத இடைவெளியில் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று எழுத்து  பூர்வமாக உறுதி அளித்த னர்.