districts

img

அனைத்து விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம், ஜூலை 20- விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேல்மலையனூர் வட்ட மாநாடு தலைவர் டி.காண்டீபன் தலைமையில் நடை பெற்றது. துணைத் தலைவர் கே.ரவி சங்க கொடியை ஏற்றி னார், துணைத்தலைவர் பி.சுரேஷ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார், மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் மாநாட்டை துவக்கி வைத்தார்.  வட்டச் செயலாளர் வி.எழில்ராஜா வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலக் குழு உறுப்பி னர் தாண்டவராயன், மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், மாவட்டத் தலைவர் பி.சிவராமன், மாவட்டத் துணைத் தலைவர் கே.மாதவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர், கே.மனோகரன் நன்றி கூறினார். வேளாண் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும், மேல்மலையனூர் வட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் விருப்பமின்றி நிலம் கையகப் படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டத் தலைவராக டி.காண்டீபன், செயலாளராக வி.எழில் ராஜா, பொருளாளராக கே.ரவி உள்ளிட்ட 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.