districts

img

நடேசன் நகர் சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்துக!

சென்னை, நவ. 6 - நடேசன் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்தக்கோரி ஞாயிறன்று (நவ.5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி, 127வது வட்டம், நடேசன் நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. 7 கிரவுண்ட் பரப் பளவு கொண்ட வளாகத் தில், ஒரு கிரவுண்ட் பரப்பளவில் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை சுமார் 55 ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர். கோயம்பேடு வணிக வளாகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் இந்த சுகா தார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சுகாதார நிலை யத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக் குறை நிலவுகிறது. ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மட்டுமே உள்ளனர். இதில்  மருத்துவர் அரை நாள்  மட்டும் சிகிச்சை அளிக்கி றார். இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்து கிடக்க  வேண்டியுள்ளது. பணிச் சுமை காரணமாக பொது மக்களுக்கு முறையாக  சிகிச்சை அளிக்கப்படுவ தில்லை. இந்த மையத்திற்கு வரும் கர்ப்பிணிகளை கோடம்பாக்கம் அல்லது சைதாப்பேட்டை மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். இந்த  மையத்தில், இட வசதி  இருந்தும் மகப்பேறு  சிகிச்சை அளிக்கப்படுவ தில்லை. எக்ஸ்ரே, ஸ்கேன் கருவிகள் இருந்தும், அதை  இயக்குவதற்கான ஊழி யர்கள் இல்லை. தனியார் மையத்தில் ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்து வந்தாலும், அதை பார்ப்பதற்கு வாரம் ஒரு முறை தான் மருத்துவர் வருவதாக தெரிகிறது. எனவே, மருத்துவ மனையை விரிவாக்கம் செய்து, 100 படுக்கை களுடன் 24 மணி நேரம்  செயல்படும் வகையில் தரம்  உயர்த்த வேண்டும். மகப் பேறு மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவர்,

செவிலியர்களை நியமித்து, அனைத்து நாட்களிலும் சிகிச்சை அளிக்க வேண் டும். எக்ஸ்ரே, ஸ்கேன் கருவி களை தினசரி இயக்கு வதற்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிவறை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. 127வது வட்டக் கிளைகள் சார்பில் நடைபெற்ற 5 குழுக்களின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பேசுகையில், “ஒன்றிய அரசை பின்பற்றி மாநில அரசு சுகாதாரத்திற்கு அதிகபட்சம் 3 - 4 விழுக்காடு நிதியை மட்டுமே ஒதுக்குகிறது. கேரளாவில் 7 விழுக்காடு வரை ஒதுக்கப்படுகிறது. கேரளா  அரசால் செய்ய முடிவதை பிற மாநில அரசு களால் செய்ய முடியாதா?” என்று கேள்வி எழுப்பினார். “அரசு மருத்துவமனை களை பலவீனப்படுத்தி தனியார் மருத்துவமனை களை வளர்க்கப்படுகிறது. மருத்துவ வியாபாரத்தை ஊக்குவிக்கும் சேவையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மருத்துவமனைகளை வலுப்படுத்த வேண்டும். முதலாளிகளுக்கு லட்சக் கணக்கான கோடிகளை தள்ளுபடி செய்யும் ஆட்சி யாளர்களால், ஸ்கேன் எடுப்பவர்களுக்கு சம்பளம் தர முடியாது என்று  கூறுவதை ஏற்க முடியுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்வில், தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், விருகை பகுதி  செயலாளர்  இ.ரவி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங் கல்வராயன், அசோகன், தீ.சந்துரு, பகுதி குழு உறுப்பினர் ம.நீலமேகம், கிளைச் செயலாளர்கள் முரு கன், சுப்பிரமணி, மோகன்,  கர்ணா மூர்த்தி, சவுந்தர ராஜன், சீதாகுமாரி, திருஞா னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.