புதுச்சேரி,ஆக.9-
ஊழல் புகாருக்கு உள்ளான புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள், விடு தலை சிறுத்தை கட்சிகள் வலி யுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் தேவ.பொழிலன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூறியதாவது:-
ஊழல் செய்பவர்களுக்கு ஆதர வாக பெருந்தொகையை லஞ்சம் பெற்றுக்கொண்டு நிர்வாக ரீதியான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வைத்த புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு உத்தர விட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு மையத்தின் இயக்குநராக செயல்பட்டு வந்த பேராசிரியர் ஹரி ஹரன், பல கோடி ரூபாய் அளவிற்கு போலி ரசீதுகள் மூலம் ஊழல் செய்து வந்துள்ளார்.
இந்த ஊழல்களை கண்டுபிடித்த தணிக்கை துறை அதிகாரிகள் ஊழல் செய்த ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுக்கும்படி துணைவேந்தர் குர்மீத் சிங் கிற்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஊழலில் ஈடுபட்ட பேராசிரியர் ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுப்ப தற்கு பதிலாக அவரை நிர்வாக ரீதியான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வைக்க ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு தப்பிக்க வைத்துள்ளார்.
இப்புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் தலை வர் ஆனந்த், சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உண்மையை ஆராய்ந்து நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட துணைவேந்தர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐக்கு உத்தர விட்டுள்ளது. எனவே ஊழலில் ஈடுபட்ட புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங் உடனடி யாக பதவி நீக்கம் செய்ய துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற உள்ள ஊழல் புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11 அன்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு தெரிவித்தனர்.