districts

img

மாணவர்களை பழிவாங்கும் புதுவை பல்கலைக்கழகம்:

புதுச்சேரி,ஜன.6- புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள ஒன்றிய பல்கலைக் கழகத்தின் கல்வி கட்டணத்தை எதிர்த்து போராடிய மாண வர்கள் 11 பேர் மீது  இரண்டு ஆண்டுகள் கழித்து நிர்வாகம் கல்வி பயில தடைவிதித்துள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகத்தின் அடாவடியை கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் பல்கலைக் கழக வளாகம் முன்பும், ஆளுநர் அலு வலகம் எதிரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் சுதாசுந்தரராமன், பிரதேச செயலாளர் ஆர்.ராஜா ங்கம், திமுக சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் தேவ. பொழிலன், சிபிஐ எம்எல் கட்சியின் மாநிலச் செயலாளர் சோ.பாலசுப்பரமணி, இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.சானு ஆகியோர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட முதல்வர் ரங்கசாமி துணை நிலை ஆளுநரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.