வேலூர், ஜன.10- காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக் கழக வளாகத்தில் பொங்கல் விழா வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடை பெற்றது. பல வண்ணங்களில் கோலங்க ளிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் பாரம்பரியமான காட்டு யானம், கருப்பு கவுனி உள்ளிட்ட அரிசியை கொண்டு பொங்கல் வைத்தனர். இதில் துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று சாதி, மத, மொழி, நாடுகளை கடந்து பங்கேற்றனர். இந்த விழாவையொட்டி கரகாட்டம், பொய்க்கால் குதிரை,தேவராட்டம்,பறை இசை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்து நடனமாடினர். சிறப்பு விருந்தினராக திரைப்பட பின்னணிப் பாடகர் வேல்முருகன் கலந்து கொண்டு கிராமிய பாடல்களை பாடினார். மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவர் கையேடு புத்தகங்கள் வெளியிடப்பட்டது.