districts

img

அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளியன்று (ஜூன் 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், ஏசிடியுசி மாநில துணைப் பொதுச் செயலாளர் ரவி, இடது தொழிற்சங்க மையத்தின் மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.குமார், சென்னை பெருநகர ஒருங்கிணைப்பாளர் சந்திரன், செபஸ்டின் (ஐக்கிய மாணவர் மன்றம்) ஆகியோர் பேசினர்.