districts

img

ஒன்றியக்குழு அதிமுக தலைவரிடம் கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல்

கடலூர், ஜூலை 19-

    கடலூர் மாவட்டம், அண்ணா கிராம ஒன்றிய குழு தலைவரின் கணக்கில் வராத ரூ. 3 லட்சத்தை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

     அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ரூ. 1 கோடி 30 லட்சத்தில் பணி களை மேற்கொள்ள இம் மாதம் 14 ஆம் தேதி நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

      அந்த பணிகளை மேற்கொள்ள அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜானகிராமன் (அதிமுக) சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்து ள்ளார். அந்த பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றியக் குழு தலைவர் ஜானகிராமனுக்கு கமிஷன் தொகையை கொடுக்க இருப்பதாகவும், இந்த  தொகையில் ஒப்பந்த பணி கிடைக்க பெறாத கவுன்சி லர்களுக்கு பிரித்து கொடுக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து, கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ந.தேவநாதன் தலைமை யில் குழுவினர் அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒன்றிய குழுத் தலைவர் அறைக்குள் புதனன்று (ஜூலை 19) புகுந்து சோதனை செய்தனர்.  

   அப்போது ஒன்றிய குழு தலைவர் ஜானகிராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் தொகையை கணக்கில் வராத பணம் ரூ.3,09,000  கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத லஞ்ச பணம் குறித்து ஒன்றிய குழுத் தலைவர் ஜானகிராமன் மற்றும் சம்பந்தப்பட்ட அலு வலர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.