சென்னை, ஏப். 29 - கோவிந்தசாமி நகர் குடியிருப்புகளை அகற்றும் பணிகளை வெள்ளியன்று (ஏப். 29) வருவாய்துறை தொடங்கியது. மயிலாப்பூர் தொகுதி, ராஜா அண்ணாமலை புரத்தில் கோவிந்தசாமி நகர் உள்ளது. இங்குள்ள இளங்கோ தெரு பக்கிங்காம் கால்வாயையொட்டி உள்ளது. இந்த தெருவில் இருந்த 625 வீடுகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. இதனையடுத்து கரையோரம் இருந்த 366 வீடுகள் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட நீதி மன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கரையின் மறுபுறம் உள்ள 259 வீடுகளை ஏப்ரல் மாதத்திற்குள் அகற்ற உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக வருவாய்த் துறையினர் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டினர். இந்நிலையில், காவல் துறையினர் நூற்றுக்கணக் கானோர் இளங்கோ தெருவில் குவிக்கப்பட்டனர். நீர்வளத்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அதிகாரி களை தெருவுக்குள் நுழைய விடாமல் மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதனையும் மீறி காவல்துறையினர் புல்டோசர்களுடன் வீடுகளை இடிக்க வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பறக்கும் ரயில் தண்டவாளத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் உருவானது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கள் எஸ்.குமார், கே.வனஜ குமாரி உள்ளிட்டோர் அதி காரிகளுடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். அதன்பிறகே புல்டோசர் வெளியேற்றப்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரேஒரு வீட்டின் சுற்றுச் சுவரை மட்டும் அதிகாரிகள் இடித்து விட்டு திரும்பி சென்றனர்.