கள்ளக்குறிச்சி, அக்.6 - உளுந்தூர்பேட்டையில் புதிதாக அரசு கலைக்கல்லூரி துவங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உளுந்தூர்பேட்டை நகர மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. சிபிஎம் உளுந்தூர்பேட்டை நகர 4 ஆவது மாநாடு கே.தங்கராசு, வி.சாமிநாதன், ஏ.தேவி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பி.ஸ்டாலின் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். எம்.ராஜேந்திரன் வரவேற்றார். வேலை அறிக்கையை நகரச் செயலாளர் பி.சேகர், வரவு-செலவு அறிக்கையை ஐ.ஷேக் சலாவுதீன் ஆகியோர் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். கே. மனோகரன் நன்றி கூறினார். தீர்மானங்கள் உளுந்தூர்பேட்டையில் புதிய கட்டுமான பேருந்து நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்டும், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையை விரிவுப்படுத்தி கூடுதல் மருத்துவர் பணி நியமனம் செய்ய வேண்டும். தீவிர அவசர சிகிச்சை பிரிவை தரம் உயர்த்த வேண்டும். உளுந்தூர்பேட்டை-திருச்சி நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும், நகராட்சி பகுதிகளில் அனைத்து தெருக்களுக்கும் தார் சாலை அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நகரக்குழு தேர்வு 11 பேர் கொண்ட உளுந்தூர்பேட்டை நகர குழுவிற்கு செயலாளராக பி.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.